ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ : 2,000க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மடிந்ததாக தகவல்
Dec 10 2019 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் காட்டுதீயில் சிக்கி இரண்டாயிரத்திற்கும் அதிகமான கோலா கரடிகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய உருவம் கொண்ட கோலா கரடிகள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. இவை அந்நாட்டின் கிழக்கு வனப்பகுதியில் பெருமளவு வசித்து வருகின்றன. அங்கு பரவிய காட்டுத்தீ, இன்னமும் கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தீயை அணைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், காட்டுதீயில் சிக்கி, 25 சதவிகிதத்திற்கும் மேலான கோலா கரடிகள் உயிர் இழந்திருப்பதாக, சூழலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.