பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காவில் உணவளிக்க சென்ற ஊழியரின் கையை கடித்த சிங்கம் - சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டதால் ஊழியர் தப்பினார்
Dec 12 2019 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கத்துக்கு உணவளித்தபோது, பூங்கா ஊழியரின் கையை சிங்கம் கடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கராச்சியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளை நிற சிங்கத்திற்கு உணவளிக்க சென்றுள்ளார். அவர் அந்த சிங்கத்திற்கு பூனை இறைச்சியை உணவாக சிங்கத்தின் கூண்டிற்குள் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிங்கம் திடீரென அந்த ஊழியரின் கையை கவ்வி கொண்டது. தொடர்ந்து அவர் கூச்சலிட்டதால் சிங்கம் அந்த ஊழியரை விடுவித்தது. தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.