நியூசிலாந்தின் வெள்ளைத்தீவில் தொடர்ந்து எரிமலை சீற்றம் : மீட்புப்பணிகள் சிரமம்
Dec 13 2019 7:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தின் வெள்ளைத்தீவில், எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடிப்பதால், மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான வெள்ளைத்தீவில் உள்ள எரிமலை வெடித்ததால், அங்கு சுற்றுலா சென்ற 47 பேர் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிமலையில் சீற்றம் தொடர்வதால், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் எரிமலை சீற்றம் ஏற்பட 50 சதவீதம் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.