அடுத்த ஆண்டு முதல் குறிப்பிட்ட பழைய மொபைல்களில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியாது - வாட்ஸ் அப் நிறுவனம் திடீர் அறிவிப்பு
Dec 13 2019 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சில குறிப்பிட்ட அலைபேசிகளில், வரும் பிப்ரவரி 2020ம் ஆண்டு முதல் 'வாட்ஸ் ஆப்' செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
'வாட்ஸ் ஆப்' சமூக ஊடக செயலியை உலகம் முழுவதும் 150 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் செயலியில் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வருகின்றன. இதன் காரணமாக சில பழைய அலைபேசிகளில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சில பழைய அலைபேசிகளில் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அலைபேசிகளை இயக்கும் ஓ.எஸ். எனப்படும் இயங்குதளமான 'ஆண்ட்ராய்டு - 2.3.7' மற்றும் ஆப்பிள் போன்களின் 'ஐ.ஓ.எஸ்-7' ஆகிய இயங்குதளங்களை கொண்ட பழைய அலைபேசிகளில் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.