நியூசிலாந்தில் வெள்ளைத்தீவு எரிமலை வெடித்து விபத்து - பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு
Dec 14 2019 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், வெள்ளைத் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் உள்ள எரிமலையை பார்த்து வர, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 6-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் 47 பேர் தீவில் இருந்தபோது, திடீரென எரிமலை வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், சிலரை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். எரிமலை வெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.