வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : அமெரிக்க எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய வடகொரியா
Dec 15 2019 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க எச்சரிக்கையை மீறி, வடகொரியா மீண்டும் மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் பங்கேற்ற உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை அமெரிக்க விலக்கிக்கொள்ள வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதற்கு டிரம்ப் பதில் கூறாத நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என வடகொரியா எச்சரித்ததோடு, 2 முறை சோதனை நடத்தியும் அச்சுறுத்தியது.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதள சோதனையில் வடகொரியா இறங்கியுள்ளதாக தென்கொரியா விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரியாவுக்கும், அந்நாட்டு அதிபர் கிம்முக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, வடகொரியா மீண்டும் முக்கியமான ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சோதனை வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.