கரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்கு சிறந்த மருந்து செங்கரும்பு
Jan 14 2020 7:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரும்பை கடித்து சாப்பிடுவதால் மனித பற்களின் ஈறுகள் உறுதியாவதாகவும், கரும்பு சாறு மனித குடலுக்கு நல்ல பாணமாக செயல்படுவதாகவும் சித்த மருத்துவர் திருமதி ஷைலஜா தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையின் சிறப்பு கரும்பு என்பதால், அதையொட்டி ஜெயா டிவிக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த அவர், சிறுநீரக கோளாறு இல்லாமல் பார்த்து கொள்ளவும் கரும்புச் சாறு பயன்படுவதாக கூறினார். கரும்பின் சுவைபோல் அதன் பலன்களும் தித்திப்பு நிறைந்தவை என அவர் தெரிவிக்கின்றார்.