பாரத் நியாய யாத்திரை பயணத்தில் குறட்டை விட்டு தூங்கிய கார்த்தி சிதம்பரம் : காங்கிரஸ் தலைவர்கள் உரிமைக்குரல் எழுப்பிய நிலையில் தனி இருக்கையில் தூக்கம்
Jan 14 2024 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பயணத்தில், கட்சியின் தலைவரே நீதி முழக்கமிட எம்பி கார்த்திக் சிதம்பரம் குறட்டை விட்டு தூங்கிய காட்சி வெளியாகி உள்ளது.
பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்காக டெல்லியில் இருந்த சிறப்பு விமானத்தில் பயணித்தபோது, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலரும் பல்வேறு கோஷங்களை ஒருமித்து எழுப்பினர். அப்போது தனி இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திக் சிதம்பரம், குறட்டை விட்டு தூங்கி உள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடானவர் அல்ல என சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்து அதிருப்தியில் சிக்கிய அவர், தனக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நடந்து கொண்டது மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.