நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் 12 அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு - மலைப் பகுதிகளில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றாறுகள், நீர்வீழ்ச்சிகள்
Aug 10 2020 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 8 நாட்களாக பெய்த கன மழை காரணமாக, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததுடன், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றாறுகள், நீர் வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கல்லட்டி , 6-வது மைல், நடுவட்டம், ஊசிப்பாறை போன்ற பல பகுதிகளில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. கடந்த ஒரு வாரம் பெய்த மழையின் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள பைக்காரா, காமராஜர் சாகர், எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா, கிளன் மார்கன் உள்ளிட்ட 11 அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக தேவாலா பகுதியில் 121 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.