பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
Sep 9 2021 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
நெல்லையை சேர்ந்த குற்றாலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். திரையரங்குகள், மால்கள் போன்றவைக்கு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவி வழிபட அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆகவே தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், 12ஆம் தேதி வரை அவற்றை வைத்திருந்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கேட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் திரு.துரைசுவாமி, திரு.முரளிசங்கர் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.