சென்னை விமான நிலையத்தில் எட்டரை கிலோ தங்கத்தை கடத்தி வந்த பெண் உட்பட இருவர் கைது
Sep 19 2014 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை எட்டரை கிலோ தங்கத்தை கடத்தி வந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூரில் இருந்து மலேஷிய ஏர்-லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த பெண் பயணி ஒருவரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். சென்னை அசோக்நகரைச் சேர்ந்த சம்பத் ராணி என்ற அந்த பெண்மணி, ஒன்றரைக்கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதேபோல் டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சர்வதேச தங்க கடத்தல் கும்பலைச் சேர்ந்த மன்மீத்சிங் பரத்வாஜ் என்பவர் சூட்கேசுக்குள் 7 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.