தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 30 2014 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியையொட்டி வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால், தமிழ்நாட்டின் தென் பகுதியில் பல இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 7 சென்டிமீட்டரும், சோழவந்தான், விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.