வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 1 2014 6:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - நகரின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.