அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக பேச்சாளர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர்

Sep 25 2014 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக பேச்சாளர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

முதலமைச்சரும், கழகப் பொதுச்செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை மாநிலம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில், 3 நாட்கள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியில் மாநகர அ.இ.அ.தி.மு.க. சார்பில், நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. P. பழனியப்பன், தலைமைக் கழக பேச்சாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதேபோல், அரூர் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாயக்கன்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. P. தங்கமணி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. P.R. சுந்தரம், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசின் 3 ஆண்டு சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தனர். இதில், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி, அரசு தலைமைக் கொறடா திரு. R. மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதில், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கநல்லூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி R. வனரோஜா மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதில், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. S.P. வேலுமணி, கோவை மேயர் திரு. கணபதி பா. ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினர்.

நெல்லையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. செந்தூர்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. M.S.M. ஆனந்தன், மாநகர மேயர் திருமதி விசாலாட்சி, தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. கோபி காளிதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உரையாற்றினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. R.B. உதயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் சமயபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. T.P. பூனாட்சி, நடிகர் திரு. ராமராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. T. ரத்தினவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதில், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பாரதிமோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உரையாற்றினர். இதேபோல் சீர்காழியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபாலும், சட்டமன்ற உறுப்பினர் திருமதி மா. சக்தியும், ஆக்கூரில் சட்டமன்ற உறுப்பினர் திரு. S. பவுன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகளும், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பெரம்பலூரில் நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டாக்டர் விஜயபாஸ்கர், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. மா. ரவிச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. R.B. மருதராஜா, திரு. மா. சந்திரகாசி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாச்சலம் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினர்.

அரியலூர் நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. ஆர். காமராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட கழகச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஆஸ்ரம் பகுதியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00