தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

Jul 26 2014 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்த மாதம் 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறஞ்சி என்ற இடத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கலந்துகொண்ட விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசினர். இதையடுத்து, அவதூறாக பேசிய விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் திரு. பொன்.சிவா நேற்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி திரு. கிருஷ்ணமூர்த்தி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00