கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் பருவ நெல்சாகுபடி பணிகள் தொடக்கம் - போதுமான மழை பெய்துள்ளதால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
Oct 29 2014 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் பருவ நெல்சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், போதுமான மழை பெய்துள்ளதால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருபருவ நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். மழை போதுமான அளவு மழை பெய்துள்ளதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. தற்போது, 2-ம் பருவ நெல்சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், தேவையான அளவு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், அதிக மகசூல் கிடைக்கும் என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.