குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கின் தாக்கம் குறைந்தது - அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
Sep 27 2014 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று காலை அனுமதிக்கப்பட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றுகாலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான செங்கோட்டை, குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை பாபநாசம் அணையில் 77.65 அடியாகவும், சேர்வலாறு அணையில் 84.58 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 55.38 அடியாகவும், கடனாநதி அணையில் 61.90 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.