மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி மும்முரம்

Oct 30 2014 7:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஆக்கூரில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்த சார் ஆட்சியர் பிரியதர்ஷிணி, பயனாளிகள் 24 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா மற்றும் 52 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளையும் வழங்கினார். மேலும், புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேளாண் கருவிகள் மற்றும் மானிய விலையில் இடுபொருட்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. இதில், செம்பனார்கோயில் ஒன்றிய குழுத்தலைவர் திரு. கே.வி. ஜனார்த்தனம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விலையில்லா நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜை, அமரும் இருக்கை உள்ளிட்ட தளவாட சமான்களை சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00