தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப சிறப்புப் பேருந்துகள் - நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் வரவேற்பு
Oct 27 2014 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதற்கு, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் தமிழக அரசு, கடந்த 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 9,088 சிறப்பு பேருந்துகளும், தீபாவளி முடித்து மீண்டும் ஊர் திரும்ப வசதியாக, கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை இதே அளவிலான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன்மூலம், பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடிய பொதுமக்கள், நெரிசல் மற்றும் சிரமமின்றி மீண்டும் தங்களின் ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். தீபாவளி மற்றும் விடுமுறை நாட்களை முடித்து, எந்தவித சிரமமுமின்றி தங்கள் ஊர்களுக்கு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்கிய தமிழக அரசுக்கு நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.