பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு - நெல்லை மாவட்டத்தில், 35,416 ஏக்கர் நிலங்கள் பயன்பெற நடவடிக்கை
Oct 10 2014 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பிசான சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரத்து 100 கன அடி வீதம் 173 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 35 ஆயிரத்து 416 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டதற்காக தமிழக அரசுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.