முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய விவகாரம் : தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு

Aug 1 2014 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் திரு. தனசேகரன் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்திபன், அக்கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வை அவதூறு தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00