உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்பு
Aug 7 2014 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், உடல் உறுப்பு தானத்தை விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்திச் சென்றனர். திருச்சி மேயர் திருமதி ஜெயா, கொடியசைத்து தொடங்கிவைத்த இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
திருப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு ஜோதி தொடர் ஓட்ட நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ-மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர். திருப்பூர் குமரன் நினைவிடத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம், கோவையில் நிறைவடைந்தது. அவினாசி, கருமத்தம்பட்டி, நீலாம்பூர் வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற ஜோதி தொடர் ஓட்டத்தின்போது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை மாணவ-மாணவியர் வழங்கினர்.
இதனிடையே, உலக தாய்ப்பால் தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான மாணவிகள், தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.