திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த மக்களின் முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Nov 1 2014 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி, பாதாள சாக்கடை விரிவு படுத்துதல், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த மக்களின் முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் திருமதி. ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரியமங்கலம் கோட்டத் தலைவர் திரு. ஜெ. சீனிவாசன், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி, பாதாள சாக்கடை விரிவு படுத்துதல், சாலைகள் அபிவிருத்தி, பள்ளிகளுக்கு கட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 300 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் புகழாரம் சூட்டினார். அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆணையர் திரு. தண்டபாணி மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.