முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகம்
Oct 30 2014 7:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் கருவின் குற்றமே, காத்திருக்கும் ஸ்பெக்ட்ரமே எனும் தலைப்பில் துண்டுபிரசுரங்கள் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் அதன் தலைவர் மு. கருணாநிதி மற்றும் அவரது கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து குவித்த சொத்துக்கள் மற்றும் அவர்கள் புரிந்த ஊழல்களை பட்டியலிட்டு கருவின் குற்றமே, காத்திருக்கும் ஸ்பெக்ட்ரமே என்ற தலைப்பில், அ.இ.அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், தமிழகம் முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கழக பாசறை மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ப. குமார் தலைமையில் அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி, அரசு தலைமைக் கொறாடா திரு. ஆர். மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரத்தினவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. என்.ஆர். சிவபதி, இந்திரகாந்தி, திரு. சந்திரசேகர் மற்றும் பாசறை நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று கருவின் குற்றமே, காத்திருக்கும் ஸ்பெக்ட்ரமே எனும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
இதேபோல் திருச்சி புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் திருவெறும்பூரிலும் கழக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.