கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் : லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
Aug 20 2014 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் அருகேயுள்ள கொண்டயம்பேட்டை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 10 டிப்பர் லாரிகளும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.