திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் நாடக விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது
Nov 1 2014 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கிடையே கல்வியில் மட்டுமின்றி அறிவியல் துறையிலும் திறனை மேம்படுத்த, அறிவியல் கண்காட்சியும், நாடக விழாவும் மாவட்டம் தோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவியர் பங்கேற்ற அறிவியலும், சமுதாயமும் எனும் தலைப்பிலான நாடக விழா நடைபெற்றது. இதில், சரிவிகித உணவு, மரபுசாரா எரிசக்தி, மறுசுழற்சி, அறிவியலாளர்களின் வரலாறு உள்ளிட்ட அம்சங்களில் அறிவியல் நாடகம் நடைபெற்றது. இதில், மாணவ-மாணவியர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வேடமணிந்து நடித்து காட்டியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அறிவியல் பாடங்களை வகுப்பறையில் கற்பதைவிட, நாடக முறையில் எளிதாக அறிந்துகொள்ள முடிவதுடன் நினைவிலும் நீங்காத இடத்தை பிடிப்பதாக மாணவ-மாணவியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.