அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சித்தார்த்திக்கு கவுரவம் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் முகமூடி அணிந்து நூதன பாராட்டு
Oct 31 2014 7:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை வலியுறுத்தியும், நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்தியார்த்தியை கவுரவிக்கும் வகையிலும், திருச்சியில் மாணவர்கள் நூதன நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
144 நாடுகளில் இருந்து 83 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராடியதால், இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில், திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், சத்தியார்த்தியின் முகமூடி அணிந்தபடி இலவசக் கல்வியை வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் திரு. பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.