திருச்சி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது
Oct 28 2014 9:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையே மண்டல அளவில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 52 பள்ளி மாணவ-மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, குப்பையிலிருந்து மின் உற்பத்தி, சோலார் மூலம் இயங்கும் தெளிப்பான், ஏவுகணை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய புதிய கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்தனர். இதனை, மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாணவ-மாணவியர் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை செயல்முறை விளக்கம் செய்துகாட்டி, பார்வையாளர்களிடம் விளக்கினர்.
இதேபோல், தூத்துக்குடியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாணவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இதில், இயற்கை மின்சார உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை பார்வைக்கு மாணவ-மாணவியர் வைத்திருந்தனர். விஞ்ஞானிகளுக்கு இணையாக அறிவியல் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், காது கேளாதவர்கள், இசையினை ரசிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த புதிய கருவி, கண்காட்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.