திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் நிறுவனம் தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி தொடங்கியது : ஏராளமான பொதுமக்கள் கண்டுரசிப்பு
Oct 13 2014 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளிப் பண்டிகையையொட்டி, திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் நிறுவனம் தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பதோடு, விரும்பி வாங்கியும் செல்கின்றனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்களையும், கைத்தறி தொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களையும் சந்தைப்படுத்தி, அவர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, மக்களின் முதல்வரது வழிகாட்டுதலின்படி, தீபாவளிப் பண்டிகையையொட்டி, பூம்புகார் நிறுவனம் தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
அதனையொட்டி, திருச்சி சிங்காரத்தோப்பில் தொடங்கப்பட்டுள்ள கண்காட்சியில் 40 கிராம் அசாம் பட்டுப் புடவைகள், வாழ்நாள் பட்டுப்புடவைகள், சுங்கடிப் புடவைகள், ராஜஸ்தான் சுடிதார் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆடைகளும், ஆபரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கண்டு ரசிப்பதோடு, 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதால், அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.