தமிழ்நாடு வனத்துறை சார்பில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு - திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு
Oct 31 2014 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு வனத்துறை சார்பில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாம்புகளின் வகைகள், வாழ்விடங்கள், விஷத்தன்மை கொண்ட பாம்புகள், விஷமில்லாத பாம்புகள் போன்ற பாம்புகள் தொடர்பான பல்வேறு தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், தீயணைப்புத் துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். வீடுகளில் பாம்புகள் புகுந்தால் அவற்றை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவது குறித்து வனத்துறையினருக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பாம்பு கடிக்கான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. வனவிலங்குகளை பாதுகாக்கவும், அவற்றுடன் ஒன்றிணைந்து வாழவும் இந்தப் பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்ததாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.