தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கால்நடை தீவனத்துக்கு பயன்படும் சோளம் நன்கு விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Oct 27 2014 7:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, கால்நடை தீவனத்துக்கு பயன்படும் சோளம் நன்கு விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டபிடாரம் மற்றும் எட்டையாபுரம் போன்ற தாலூகாக்களில், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த தாலுகாக்களில் பயிரிடப்பட்ட சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. சோளத்தில் கதிர்களை பிரித்தெடுத்துவிட்டு அதன் தழைகளை கால்நடை தீவனமாக பயன்படுத்துவார்கள். எனவே இந்த ஆண்டு கால்நடை தீவனத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.