கோவில்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் கால் முறிவுக்கு, மக்களின் முதல்வர் கொண்டுவந்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் நவீன அறுவை சிகிச்சை
Oct 13 2014 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவில்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் கால் முறிவுக்கு, மக்களின் முதல்வர் கொண்டுவந்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள முப்பன்பட்டியினை சேர்ந்த கூலித் தொழிலாளியான எட்வர்ட் என்பவருக்கு, கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் இடதுகாலில் முறிவு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட இவருக்கு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இலிசாரோ என்ற நவீன அறுவை சிகிச்சை முறையில் இடது காலில் அறுசை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் இவர் நலமாக இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு பின் இவர் முன்பு போல் நடக்கலாம், மிதிவண்டி ஓட்டலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைகளில் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை, மக்கள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனக்கு செய்யப்பட்டுள்ளதற்கு கூலித் தொழிலாளி எட்வர்ட் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.