அ.ம.மு.க. கொடியை அகற்றி அதிமுகவினர் அராஜகம் : செங்கல்பட்டில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்
Jan 23 2020 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில், கம்பத்தில் ஏற்றப்பட்ட அ.ம.மு.க. கொடியை அகற்றி, ஆளும் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை யொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், அந்தந்த பகுதிகளில் கழகக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் பகுதியில் இருந்த கொடி கம்பத்தில், அ.ம.மு.க.வினர் கொடியேற்றிய நிலையில், அங்கு வந்த அதிமுகவினர், ஆளுங்கட்சி என்பதால், தங்களுக்கு மட்டுமே கொடியேற்ற அனுமதி இருப்பதாக, ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அ.ம.மு.க. கழகக் கொடியை தூக்கி எறிந்தனர். அப்போது, கழக ஒன்றிய செயலாளர் திரு. பாரதி பாபு மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுகவினரின் கொடி கம்ப தூணிற்கு முன்பாக, அ.ம.மு.க. கொடி கம்பத்தை நிறுவ முடிவு செய்து, அதற்கான கட்டுமான பணியையும் மேற்கொண்டனர்.