மறக்க வேண்டிய நிகழ்வுகளை நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஏன் நினைவூட்டுகிறார்? : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி
Jan 23 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறக்க வேண்டிய நிகழ்வுகளை நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஏன் நினைவூட்டுகிறார்? என ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
திரு. வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கூறிய கருத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளதாகவும், அதன்பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், இவை மறக்கக்கூடிய நிகழ்வுகள் என்று மட்டும் கூறுகிறார் - பெரியார் குறித்து அவதூறாகக் கருத்து கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே என்றும் தெரிவித்துள்ளார். தொடங்கி வைத்தது ரஜினிகாந்த் - அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும் என்றும் திரு.வைகோ கூறியுள்ளார்.