சேலம் கழக நிர்வாகியின் மகன் மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று ஆறுதல்
Jan 23 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மத்திய மாவட்ட அ.ம.மு.க செயலாளர் திரு.S.E. வெங்கடாச்சலத்தின் மகன் சந்தோஷ் மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சேலம் கழக நிர்வாகி திரு.S.E. வெங்கடாச்சலத்தின் மகன் சந்தோஷ், அண்மையில் காலமானார். இதனையடுத்து, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று சேலத்தில் உள்ள திரு.வெங்கடாச்சலத்தின் இல்லத்திற்கு நேரில் சென்றார். மறைந்த சந்தோஷின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர், குடும்பத்தினருக்கு திரு.டிடிவி தினகரன் ஆறுதல் தெரிவித்தார்.