நெல்லையில் மாயமான ஓட்டுனர் சடலமாக மீட்பு - 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Jan 23 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில், மாயமான ஓட்டுனர் மாசானமூர்த்தி என்பவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தச்சநல்லூர் அருகே கரையிருப்பு சுந்தராபுரத்தைச் சேர்ந்த மாசானமூர்த்தி மாயமானது குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி காவல்நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கரையிருப்பு பகுதியில், குழியைத் தோண்டி மாசானமூர்த்தியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாசானமூர்த்தியின் நண்பர்கள் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.