சிறுத்தை கடித்து பசுமாடு பலியானதால் ஈரோடு மாவட்டம் நெய்தாளபுரம் கிராம மக்கள் அச்சம்
Jan 23 2020 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறுத்தை கடித்து பசுமாடு பலியானதால், ஈரோடு மாவட்டம் நெய்தாளபுரம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் திரு. வீரபத்திரன் என்பவர் தனது தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு திடீரென இறந்ததால் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பசுவைக் கொன்றது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.