மூன்று கொலைகள் உள்பட 15 வழக்குகளில் தொடர்புடைய பிரபல பெண் தாதா எழிலரசி கைது - குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் அதிரடி
Jan 23 2020 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மூன்று கொலைகள் உள்பட 15 வழக்குகளில் தொடர்புடைய பெண் தாதாவை, கைது செய்த காரைக்கால் போலீசார், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல பெண் தாதா எழிலரசி என்பவர், கடந்த 2017ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் சிவக்குமாரை கூலிப்படை வைத்து வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்தார். இதேபோல் மேலும் இருவரை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார். எழிலரசி மீது கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் சிறையில் இருந்த எழிலரசி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால், பெண் தாதா எழிலரசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த எழிலரசியை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தாதா எழிலரசி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.