திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயம்
Jan 23 2020 8:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், பல்லடம் நோக்கி வந்த சரக்கு லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பேருந்து மற்றும் லாரி கடுமையாக சேதமடைந்தன. பேருந்து ஓட்டுநர் வேடியப்பன் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். வாகன இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.