குன்றத்தூர் தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் காயம்
Jan 23 2020 8:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குன்றத்தூர் தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் அரசுப் பேருந்து ஒன்று தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர். சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அந்த பேருந்து, குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.