சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : மின் கசிவு காரணமா? என போலீசார் விசாரணை
Jan 23 2020 8:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவியது.
சென்னை திருவல்லிக்கேணி லால் பேகம் தெருவைச் சேர்ந்த அஷ்வாக் அகமத் என்பவரது வீட்டின் 3-வது மாடியில், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உபயோகப்படுத்தாத பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியிலிருந்து, புகை வெளியேறியதால் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் ஒரு மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. புகை வேகமாகப் பரவியதையடுத்து, அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.