அ.ம.மு.க ஊராட்சி மன்றத்தலைவரை மிரட்டிய அ.தி.மு.க.வினர் : தேசியக்கொடி ஏற்ற விடாமல் கொடியை அறுத்து அராஜகம்
Jan 26 2020 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, அ.ம.மு.க ஊராட்சி மன்றத்தலைவரை தேசியக்கொடி ஏற்ற விடாமல் கொடியை அறுத்து அ.தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே ராஜாக்காபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக அ.ம.மு.க.வை சேர்ந்த சித்ரா பால்ராஜ் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, எம்.பாறைப்பட்டி கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றியபோது, அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் முத்தையா, ஈஸ்வரன் ஆகியோர், தனது ஆதரவாளர்களுடன் வந்து, தங்களை கேட்காமல் தேசியக்கொடி ஏற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் குடியரசு தின விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், தேசியக்கொடியை ஏற்ற விடாமல் கொடியை இறக்கி, கொடிக் கம்பத்திலிருந்து தேசியக்கொடியை அறுத்து எடுத்துச் சென்றனா். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.