திருச்சி மாநகரில் பா.ஜ.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றம் - மர்ம கும்பலின் வெறிச்செயலால் அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்

Jan 27 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வரகனேரி உப்பு பாறை பகுதியைச் சேர்ந்த விஜய் ரகு, காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு சீட்டு வழங்கும் பணி செய்து வந்தார். பாஜக மண்டல செயலாளராகவும் பணியாற்றிய அவர் இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அடங்கிய ஒரு மர்ம கும்பல், விஜய்யை சரமாரியாக வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காந்தி மார்க்கெடு பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 23ம் தேதி முன்விரோதம் காரணமாக உறையூர் பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நிகழ்ந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தபடுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00