பலத்த காற்று வீசுவதால் நலிவடையும் மீன்பிடித்தொழில் - தூத்துக்குடிக்கு படையெடுக்கும் கன்னியாகுமரி மீனவர்கள்
Jan 27 2020 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றம் காரணமாக மீன் பிடித்தொழில் நலிவடைந்து வருவதால் அங்குள்ள மீனவர்கள் பிழைப்புக்காக தூத்துக்குடியில் குவிந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசிவருவதால் அங்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மீன் பிடி தொழில் மிகவும் மோசமான நிலைக்கு எட்டியுள்ளது. இதனால் அவர்கள் பிழைப்பு தேடி தூத்துக்குடியில் குடியேறியுள்ளனர்.