ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் படுகர் இன மக்களின் குலதெய்வ கோவில் திருவிழா - பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி உற்சாகம்
Jan 28 2020 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், கோயில் திருவிழாவில் படுகர் இனமக்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய நடனமாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தாளவாடியை அடுத்த கேர்மாளம் வனப்பகுதி கோட்டாடையில் படுகர் இனமக்களின் ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. கேர்மாளம் கோட்டாடை, தேவர்நத்தம், ஓசட்டி, அட்டைகட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் படுகர் இனமக்கள் தங்களுடைய விவசாயம் செழிக்கவும், ஊர் வளமாக இருக்கவும் ஹெத்தையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஹெத்தையம்மன் கோயிலில் கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படுகர் இன மக்கள், பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.