குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு : காரைக்காலில் 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன பேரணி
Jan 28 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், கையில் தேசியக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் திருப்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், தேசியக்கொடி மற்றும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, போலகம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திருமப்பெற வேண்டும் என்.ஆர்.சியை கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.