செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரம் - சுங்கச்சாவடியில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Jan 28 2020 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது, மர்மநபர் ஒருவர் சுங்கச்சாவடியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனால் பேருந்துகள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஊழியர்கள் இல்லாததால் கடந்த 3 நாட்களாக சென்னையிலிருந்து செல்லும் வாகனங்கள், கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சுங்கச்சாவடி ஊழியர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுங்கச்சாவடி சூறையாடப்பட்டதில், அலுவலகத்திலிருந்து 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கலவரத்தின் போது, சுங்கச் சாவடியில் இருந்து ஒருவர், பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.