கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்து சாதனை
Jan 30 2020 7:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து, ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்து, சாதனை புரிந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், தனியார் அமைப்புடன் இணைந்து, விதைப்பந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டனர். புங்கன், வாகை, மயில் கொன்றை, வன்னி உள்ளிட்ட 12 வகையான மரங்களின் விதைகள் இதில் பயன்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தயார் செய்யப்பட்ட ஒரு லட்சம் விதைப் பந்துகள், இதய வடிவில் அடுக்கப்பட்டன. வருங்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், விதைப்பந்துகளை தயார் செய்துள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.