இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தப்படவிருந்த ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ தங்கக்‍கட்டிகள் - திருட்டு நகைகளை உருக்கி தங்கக்‍கட்டிகளாக மாற்றி கடத்தியதாக தகவல்

Feb 16 2020 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தப்படவிருந்த ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ தங்கக்‍கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் நின்ற படகை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தங்கக்‍ கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டம் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்றனர். படகில் பதுக்கி வைக்‍கப்பட்டிருந்த 14 கிலோ 35 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஐந்தரை கோடி ரூபாய் இருக்‍கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் நகைகளை திருடும் கும்பலிடம் இருந்து, திருட்டு நகைகளை வாங்கி, அவற்றை உருக்கி கட்டிகளாக மாற்றி, இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00