குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் : சிறப்பு காவல்துறை அதிகாரிகள் நியமனம்
Feb 16 2020 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கும் வகையில், தமிழகத்தின் தென்மாவட்டங்களில், சிறப்பு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மதுரை மாநகரம் மற்றும் சரகத்திற்கு திரு. அபய்குமார் சிங்கும், திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரகத்திற்கு திரு. மகேஷ்குமார் அகர்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இடங்களை கண்காணிக்கும் வகையில், சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பம், போடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.